Sunday 17 June 2012

இனி ஏ.டி. எம் அட்டை தேவை இல்லை ஸ்மார்ட் போன் போதும்

நாம் வழக்கமாக ஏ.டி. எம் மிசினில்  பணம் எடுக்க வேண்டும் என்றால் ஏ.டி. எம் அட்டை பயன்படுதுவோம். ஒரு வேலை உங்கள் ஏ.டி. எம் அட்டை நீங்கள் தவற விட்டால் உங்கள்
பணம் கோவிந்தா தான். இபோதோ உள்ள காலத்தில் கம்ப்யூட்டர் பத்தி அறியாதவர்கள் எண்ணி விடலாம். ப்ளக் ஹட் (Hackers ) எனப்படும் கணினி மூலம் திருடுபவர்கள் இப்பொது அதிகரித்து கொண்டே இருகிறார்கள். ஏ.டி. எம் அட்டை நான்கு இழக்க எண் கொண்டது. அதை ஹேக்கர்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள். 


இதை பூர்த்தி செய்யவே மொபைல் மூலம் ஏ.டி. எம் அணுகும் வசதி செய்யப்படுள்ளது. இதற்கு மொபைல் போனில் ஒரு மென்பொருள் இருந்தால் போதும், அதை வைத்து பணம் பரிமற்றம் செய்யலாம். அந்த மென்பொருள் நீங்கள் மட்டும் உபோயிகிகும் விதத்தில் செயல்படும்.


இந்த வசதி வெளிநாடுகளில் தொடங்கி உள்ளனர். NCR எனும் ஒரு நிறுவனம் இந்த சேவையை ATM மிசின்னில் பொறிக்கிறது. இந்த வசதிக்கு புதிய ATM மிசின் வாங்க தேவை இல்லை. ATM யில் உள்ள மென்பொருளை மேம்படுத்தினால் போதும். 


இந்த வசதி வந்தால் உங்கள் பணம் முந்தை விட பத்திரமாக இருக்கும். அது மட்டும் இன்றி ஏ.டி. எம் அட்டை தொலைந்து விடுமோ என்றஅச்சமும் தேவை இல்லை. 


இந்த சேவை விரைவாக இந்திய வருமா???

No comments:

Post a Comment